வணக்கம்

வெள்ளி, 20 டிசம்பர், 2019

வறுமையை நாட்டிலிருந்து ஒழிக்கும் நோக்கில் ஜனவரி 15 முதல் வேலை வாய்ப்பு

வறுமை இல்லாதொழிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் ஜனவரி 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தாம் வசிக்கும் பிரதேசத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்பதுடன் மாதாந்தம் 35,000 ரூபா சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.சுபீட்சத்தின் செட்டிங் நோக்கு கொள்கை பிரகடனத்தை மைய அபிவிருத்தி ஒன்றினை அமைப்பதற்கான முதலாவது கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றதுமிகவும் வறிய மட்டத்தின் வாழ்ந்துவரும், சமுர்த்தி...

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

எச்சரிக்கை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை இன்று முதல் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடக்கு, வடமேல், சப்ரகமுவ, மேல், மத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும், மணிக்கு 100 மில்லி மீற்றர்களுக்கும் 150 மில்லி மீற்றர்களுக்கும்  இடைப்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் திணக்களம் கூறியுள்ளது. அதேபோல தெற்கு, ஊவா, வடமத்திய  மாகாணங்களிலும்,மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றர்களுக்கும்...

புதன், 19 ஜூன், 2019

வழங்கப்படும் விசேட தேவையுடையவர்களுக்கு கொடுப்பனவில் மாற்றம்

விசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம்  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா வழங்கப்பட்டது.32 ஆயிரம் பயனாளிகள் இதன்மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது 40,000 பேர் வரை பதிவு செய்துள்ளதாக நிதி அமைச்சு சுட்டிக்...

புதன், 5 ஜூன், 2019

இலங்கையர்களுக்கும் புயலுக்குப் பெயர் வைக்க சந்தர்ப்பம்

வட இந்திய பெருங்கடலில் ஏற்படவுள்ள புயல் காற்றுக்குப் பெயர் வைப்பதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளையும் கருத்துகளையும் வளிமண்டலவியல் திணைக்களம்  கோரியுள்ளது. இதன்படி திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் பெயரை குறிப்பிடுவதற்கு சில நிபந்தனைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆகையால் விரும்பியவர்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தை தொடர்பு கொண்டு...

செவ்வாய், 30 ஏப்ரல், 2019

மீண்டும் கிழக்கில் 29,04,19, மாலை முதல் ஊரடங்குச் சட்டம்

இன்று மாலை 6.00 மணி முதல் நாளை காலை 8.00 மணி வரை கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும்  $காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக்  குறிப்பிட்டுள்ளார். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

திங்கள், 29 ஏப்ரல், 2019

விசேட அறிவித்தல் பொனி சூறாவளியின் தாக்கம்

   பொனி சூறாவளியானது மட்டகளப்பில் இருந்து கிழக்கு திசையில் சுமார் 660 கிலோமீற்றர் தொலைவில் தற்போது  நிலைக்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில், பொனி  சூறாவளியின் தாக்கத்தினால், நாட்டின் பல மாகாணங்களில் தொடர்ந்துவரும் மணித்தியாலங்களில் நூறு மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம்  எதிர்வு கூறியுள்ளது.மேலும், சிலப்பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைபெய்யக்...

சனி, 27 ஏப்ரல், 2019

அரசாங்க வேலை வாய்ப்பு க.பொ.த உயர்தரத்துடன்

இலங்கை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டப்பின் படிப்பு நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாளர்  பதவிக்கு வெற்றிடம்* 🌐 *(தகைமை – க.பொ.த உயர் தரத்தில் சித்தி + 6 மாத கணணிக் கற்கை + 2 வருட வேலை அனுபவம்)* 🌐 *(விண்ணப்ப படிவம் பதிவில் இணைக்கப்பட்டுள்ளது)* 🌐 *விபரமாக -* https://goo.gl/rPNfny 🌐 *விண்ணப்ப முடிவுத் திகதி – 05.03.2019* விண்ணப்ப படிவத்தைப் பெற இங்கே அழுத்துங்கள் இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>...

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில  இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.வடக்கு மற்றும் கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும் என  எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.  மின்னல்...

காலநிலை குறித்த விசேட எச்சரிக்கைவடபகுதியில் வாழும் மக்களுக்கு

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3 நாள்கள் பலத்த காற்றுடன் அதிகரித்த மழை பெய்யும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.வங்காள விரிகுடாவில்  ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வடக்கில் 28 ஆம் 29ஆம் 30ஆம் திகதிகளில் அதிக மழை வீழ்ச்சி ஏற்படும்.எதிர்வு கூறப்படும் மழை வீழ்ச்சி 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் ஆக காணப்படுகிறது.ஆகவே வெள்ள மூழ்கடிப்பு நிலை ஏற்படும். சுமார்  70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும்.வேகமான காற்றுடன் அதி கூடிய...

புதன், 24 ஏப்ரல், 2019

வழங்கும் நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடல்

பல நாடுகளுக்கான வீசா வழங்கும் கொழும்பிலுள்ள நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தவகையில், இந்தியாவுக்கான வீசா வழங்கும் ஐ.வீ.எஸ். லங்கா நிறுவனம், ஐரோப்பிய நாடுகளுக்கு வீசா  வழங்கும் வீ.எப்.எஸ். குலோபல் வீசா நிலையம் என்பன மூடப்பட்டுள்ளன. அத்துடன், மலேசியா, தாய்லாந்து மற்றும்  சீனா ஆகிய நாடுகளுக்கு வீசா வழங்கும் தூதரகங்களுடன் இணைந்து இயங்கும் நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்படுகின்றது. ...

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

தொடர் குண்டு வெடிப்புகள் நாட்டில் பல்வேறு இடங்களில் இடம்பெற்றது

1. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் 2. நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம் 3. மட்டக்களப்பு, சியோன் தேவாலயம் 4. கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல் 5. கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல் 6. கொழும்பு, சினமன் கிராண்ட் 7. கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன் 8. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -1 9. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -2 நாட்டில் இன்று காலை தொடக்கம் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்று 180 இற்கும் அதிகமான...

அனைத்து வடமாகாண சபைக்கு உள்பட்ட அரச அலுவலகங்கள் விடுமுறை

வடமாகாண பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வியமைச்சினால்,22,04,2019 நாளையும் 23,04,2019  நாளை மறுதினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில்  வடமாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து மாகாண அரச அலுவலகங்களுக்கும் 22,04,19 நாளை(22) திங்கட்கிழமை விடுமுறை வழங்குவதற்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்  பணிப்புரை விடுத்துள்ளார். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

இலங்கை ஊடரங்கு நடைமுறைக்கு பாதுகாப்பு அமைச்சு

நாடுமுழுவதும் ஊடரங்கு இன்று மாலை 6 மணி தொடக்கம்  நாளைக் காலை 6 மணிவரை நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நாட்டில் இன்று காலை 6 இடங்களிலும் பிற்பகல் தெஹிவளை மற்றும் தெமட்டகொடவில் என 8 இடங்களில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்இ சமூக வளைத்தளங்களும்  தடை செய்யப்பட்டுள்ளன. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

இலங்கையில் 3 நாட்களுக்கு ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையின் பல பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வெப்பமான வானிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய, நாளைய தினம் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும். குறித்த பகுதிகளில் பணிகளில் ஈடுபடுபவர்கள், அதிகளவு நீரை அருந்த வேண்டும் என்றும், தங்களது பணியிடங்களில் தேவையான...

திங்கள், 15 ஏப்ரல், 2019

யாழில் மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் மோதல்

மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் பாடசாலை மாணவர் ஒருவர் வெட்டுக் காயத்துகு இலக்காகி சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியசாலையில்  சிகிச்சை வழங்கப்பட்ட போது அங்கு வந்த கும்பல் ஒன்று மாணவருடன் வைத்தியசாலைக்குச் சென்றவர்களை தாக்க முற்பட்டதால்  பதற்றம் ஏற்பட்டது. வரணி இயற்றாளையில்  மாணவன் தாக்கப்பட்டார். வைத்தியசாலைக்குள் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில்...

வெள்ளி, 29 மார்ச், 2019

நாம் சுலபமாக பணத்தை சேமிக்க வேண்டுமா 6 வழிகள்

பணத்தை கையாளுவது மிகவும் கடினமான காரியமாகும். அதற்கு பல காரணங்கள் உண்டு. பலருக்கு செல்வத்தை மதிப்பிட்டு வைத்துக்கொள்வது என்பது புரியாத விஷயமாக உள்ளது. இன்றைய  உறுதியற்ற பொருளாதார உலகில் வாழும் நாம் திட்டமிட்டு பணத்தை செலவு செய்வது அவசியம் நிதி திட்டமிடல் என்னும் விஷயத்தை நாம் சரியாக திட்டமிட்டால் எளிய மற்றும் நிலையான தீர்மானங்களை எடுக்க முடிகின்றது. இதனால் நமது இலக்கையும் எளிமையாக எட்டவும் முடியும். கீழ்வரும் பகுதியில் பணம் சேமிக்கும்...

திங்கள், 25 மார்ச், 2019

யாழ் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய நிர்­வா­கத்­தி­னரின் அறிவித்தல்

யாழ் மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் ஆல­யத்­துக்கு உந்­து­ரு­ளி­யில் வரு­கின்ற அடி­யார்­கள் அவ­சி­யம் தலைக்­க­வ­சம் அணிந்து வரு­மாறு ஆலய நிர்­வா­கத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர். வாகனப் பாது­காப்பு நிலை­யங்­க­ளில் தலைக்­க­வ­சம் பாது­காப்­பாக வைப்­ப­தற்கு ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்பட்­டுள்­ள­தால் தலைக்­க­வ­ச­மின்றி ஆல­யத்துக்கு வருகை தர­வேண்­டா­மென உந்­து­ரு­ளி­க­ளில் வரு­வோ­ருக்கு ஆல­யத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர். கடந்த வரு­டம்...

சனி, 23 மார்ச், 2019

அவசர அறிவித்தல் வடக்கில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு

நாட்டின் 9 மாவட்டங்களில் 23,03,2019, கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பத்துடனான  காலநிலை நிலவும். இது குறித்து மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில்...

மக்களுக்கு ஓர் அவசர முன்னறிவித்தல்.!மின்சாரத் தடை தொடரும்

இலங்கையில் தொடர்ந்தும் மின்விநியோகம் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார் து தொடர்பான தகவல்கள் கடந்த 18ம் திகதி மின்சக்தி அமைச்சின் செயலாளரினால், உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக முன்னறிவித்தல் எதுவும் இன்றி மின்சாரம்  துண்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு...

செவ்வாய், 12 மார்ச், 2019

கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய சூழல் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தினை முன்னிட்டு ஆலயச் சூழலை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு  வருகின்றன. ஆலயத்தின் சூழலானது முரசு மோட்டை ஊரியான் கோரக்கன் கட்டு பிரதேசங்களை சேர்ந்த மக்களால் சுத்தம்  செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் மதுப்பாவனை மற்றும் பொலித்தீன் பாவனை என்பன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 14ஆம்...

திங்கள், 11 மார்ச், 2019

நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை?

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் பொழுது எரிபொருளிக் விலை சூத்திரத்தை மையப்படுத்தி விலை நிர்ணயம் தொடர்பில் ஆராயும் குழு நாளை  கூடவுள்ளது. இதற்கமைய  நாளை நள்ளிரவிற்கு பிறகு எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் என  நிதியமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருளின் விலை சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருளின் விலையில் மாற்றம் ஏற்படும் . உலக சந்தையில் எரிபொருளின் விலையில் கடந்த வருடத்தின்  மூன்றாம் காலாண்டு...

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

நீங்கள் அறியாத அற்புத மருத்துவப் பலன்கள்கொண்டஓமம்

சிலர் எவ்வவயிறுப் பொருமல் நீங்க: சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல்,...

சனி, 16 பிப்ரவரி, 2019

சரஸ்வதி சிலை ஐந்த இலட்சம் ருபா செலவில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில்

யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி உருவச் சிலை இன்று வெள்ளிக்கிழமை திறந்து  வைக்கப்பட்டுள்ளது. பாடசாலைச் சமூகத்தின் வேண்டுகோளுக்கமைய யாழ் நகரிலுள்ள மகாநதி நகைமாட உரிமையாளரால் ஐந்த இலட்சம் ருபா செலவில் அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலையை பாடசாலையின் அதிபர் மகேந்திரராசா மற்றும் மேற்படி நகைகக் கடை உரிமையாளர் ஆகியோர் இணைந்து  திறந்து வத்தனர். பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற விசேட அபிசேக ஆராதனை வழிபாடுகளின் பின்னர்...

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

தனியார் கல்வி நிலையங்களுக்கு வவுனியாவில் பூட்டு

வவுனியா தனியார் கல்வி நிலையங்களை நாளைய தினம் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தனியார் கல்வி நிலையங்களின் சங்கத்தலைவர் தி. கோபிநாத் தெரிவித்தார். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மகாவித்தியன் தினம் நாளைய தினம் பிரமாண்டமான முறையில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் இந் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கோடு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...

ஆவரங்கால் பாடசாலை அதிபரின் கீழ்த்தரமான செயல்

ஆவரங்கால் பகுதியில் அமைந்திருக்கும் பாடசாலை ஒன்றின் அதிபர், யாழ் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகையில் பத்து லட்சம் ரூபாவினை பெற்று, குறைந்த ரூபாவிற்கு மட்டும் வேலையை செய்து முழுப்பணத்திற்கான கணக்கை காட்டியதாக பாடசாலை நலன்விரும்பிகள் விசனம் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, வெளிநாட்டில் இருக்கும் பழைய மாணவர்களால் வாங்கப்பட்ட காணிக்கும் அவர்களால் செய்யப்படட வேலைகளுக்கும் இந்த பத்து லட்சத்திலேயே கணக்கு காட்டப்பட்டிருப்பதாக மேலும்  தெரிவிக்கின்றனர். முன்னரும்...