வணக்கம்

செவ்வாய், 29 டிசம்பர், 2015

கடலுக்குள் சென்ற மீனவர்களில் இருவர் மரணம் ஒருவர்உயிர்தப்பியுள்ளார்?

யாழ் பருத்தித்துறை முனைப் பகுதியில் அதிகாலை கடலுக்குள் சென்ற மீனவர்கள் மூவரை பாரிய அலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது. இச் சம்பவத்தில் இரு மீனவர்கள் பலியாகியுள்ளனர். ஒருவர் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளார். கடல் அலை இழுத்துச் சென்றவர்களை  தேடும்பணியில் கடற்படையினரின் சுழியோடிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஜெனிபேட், ஜோர்ஜ் ஆகிய இருவருமே மரணமடைந்தவர்களாவர். கடற்படையினரின் தேடுதலில் ஜோர்ஜ் என்னும் ஒரு மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய மீனவரின்...

யாழ் புங்குடுதீவு- அனலைதீவுக்கு இடையில் பயணித்த படகு மூழ்கியது!

புங்குடுதீவு- அனலைதீவு இடையே சேவையில் ஈடுபட்டுருந்த நோயாளர் காவு படகு கடலில் வீசீய காற்றின் காரணமாக கடலில் மூழ்கியது. வடமாகாண சுகாதார அமைச்சினால் யாழ்.புங்குடுதீவு- அனலைதீவு இடையில் நோயாளர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட அம்புலன்ஸ் படகு இன்றைய தினம் காலை கடல் கொந்தளிப்பினால் கடலில் மூழ்கியுள்ளது. யாழ். மற்றும் அனலைதீவு இடையே இடம்பெறும் போக்குவரத்தினால் நோயாளர்கள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து குறித்த படகு...

வெள்ளி, 25 டிசம்பர், 2015

சட்டவிரோத சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது!!!

யாழ்ப்பாணம்  கொழும்புத்துறைப் பகுதியில் சட்டவிரோதமாக சாராய போத்தல்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த புலிக்குட்டி என அழைக்கப்படும் 44 வயதுடைய தர்மலிங்கம் தர்மகுலராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜன்  தெரிவித்துள்ளார். நபரொருவர் தனது உடமையில் பத்துப் போத்தல் சாராயத்தையே வைத்திருக்கக்கூடிய...

செவ்வாய், 22 டிசம்பர், 2015

செஞ்சிலுவைச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திறப்பு

யாழ்.பிரதான வீதியிலுள்ள மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், லங்கா பெற்றோலிய நிறுவனத்தின் முகாமைப்பணிப்பாளர் சியாம் போரா ஆகியோர் கலந்து கொண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தை திறந்து வைத்தனர். மேற்படி இடத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம் நிர்மாணிப்பதற்கான அனுமதி முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவின்...

சனி, 19 டிசம்பர், 2015

.பொலிஸார் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்

யாழ்.குடாநாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டமாக, யாழ்.மாவட்டத்தில் சகல பகுதகளிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரும் துண்டு பிரசுரங்களை பொலிஸார் ஒட்டியுள்ளனர். குடாநாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருக்கும் நிலையில் பொலிஸார் இந்த நடவடிக்கையினை  மேற்கொண்டுள்ளனர். இதற்கமைய போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்தும் வகையில் ஹெரோயின் மற்றும் போதைக்பொருள் பாவனையினை கட்டுப்படுத்த உதவுமாறு பொலிஸாரின் தொலைபேசி இலக்கத்துடன்...

புதன், 16 டிசம்பர், 2015

வெங்கனாந்தி பாம்பு 22 கிலோ எடையுடன் மக்கள் அச்சத்தில்

யாழ் சாவகச்சேரி,  தட்டான்குளம் பிரதேசத்தில் வெங்கனாந்தி இன பாம்பு ஒன்றை மக்கள் பிடித்துள்ளனர். இன்று காலை 7.00 மணியளவில் இந்த பாம்பைப் பிடித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 22கிலோ 300 கிராம் எடை கொண்ட இந்தப் பாம்பு 8 அடி நீளமானதாகப் காணப்படுகிறது. காடுகளில் வசிக்கும் வென்கனாந்தி இன பாம்புகள் விலங்குகளை இரையாக உட்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,  இதனால் அந்த பிரதேச மக்கள் பீதியோடு காணப்படுகின்றனர் இங்குஅழுத்தவும் மேலதிக...

சனி, 12 டிசம்பர், 2015

மாணவர்கள் யாழில் சீருடைகளைப் பெற்றுக் கொள்ளும் வர்த்தக நிலையங்கள்

யாழ்ப்பாணக் கல்வி வலயப் பாடசாலை மாணவர்கள் கூப்பன் அடிப்படையிலான சீருடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வர்த்தக நிலையங்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அபி றேடர்ஸ், இல-112,கே.கே.எஸ்.வீதி .யாழ்ப்பாணம் .சிறி கணேஷ் புடவையகம், இல-20 ,நவீன சந்தை, யாழ்ப்பாணம் ஆறுமுகம் ரெக்ஸ்ரைல்ஸ், இல-20,பெரிய கடை.யாழ்ப்பாணம். சென்னை பசன் வேல்ட் ,இல-63 ,பெரிய கடை ,யாழ்ப்பாணம். கணேசன் ஸ்ரோர்ஸ், இல-41,பெரிய கடை, யாழ்ப்பாணம். குமாரசாமி ரெக்ஸ் ,இல-44|42,...

வியாழன், 10 டிசம்பர், 2015

மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவில்

இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சோரங்க் பகுதியில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை  இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>...

செவ்வாய், 8 டிசம்பர், 2015

இரண்டு பிள்ளைகளின் தந்தை பணக்கார பெண்ணை ஏமாற்றி திருமணம் புரிந்தர் ! ! !

ஏற்கனவே திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தனியார் நிறுவனம் ஒன்றின் அதிகாரி, தாம் மணம் முடிக்கவில்லை என்று கூறி 24வயதான பணக்கார பெண் ஒருவரை திருமணம் முடித்து  தேன்நிலவில்  இருக்கும் போது உண்மையான மனைவியால் பிடிக்கப்பட்டார். இந்த சம்பவம் கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே தாம் மணம் புரிந்த மனைவி வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தின் பணிப்பாளராக உள்ள 24 வயது...

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

வானிலையின் சீரற்றத்தல் பராக்கிரம சமுத்திரத்தின் பத்து வான் கதவுகள் திறப்பு

பொலன்னறுவை பகுதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் பராக்கிரம சமுத்திரத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மகாவலி கங்கையை அண்மித்த பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம்  அறிவித்துள்ளது. அத்துடன், கவுடுள்ள வாவியின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.எம்.பீ கருணாரத்ன தெரிவித்துள்ளார். மேலும், நிமிடத்திற்கு 1200 கனஅடி நீர் பராக்கிரம சமுத்திரத்தின்...

வெள்ளி, 4 டிசம்பர், 2015

ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழதுள்ளார்!

 கிளிநொச்சி, வட்டக்கச்சி, தச்சன் வீதியிலுள்ள மரப்பட்டறை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (04) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். மரம்  அரியும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, இவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இவரை மீட்ட உறவினர்கள் உடனடியாக அவரை  கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்திருந்தமை வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டது....

புதன், 2 டிசம்பர், 2015

மரக்கறிகளின் விலைகள் யாழ் சந்தைகளில் அதிகரிப்பு!

யாழ் சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன.அண்மைய நாட்களில் அதிகளவான மழை பெய்தமையால் மரக்கறிகளின் உற்பத்தி  குறைவடைந்தது.   இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்,  1 கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகளில் கறிமிளகாய் 1 கிலோகிராம் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன், 1 பிடி கீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் போதும், கீரையை சந்தைகளில்...