வணக்கம்

வியாழன், 16 பிப்ரவரி, 2017

சர்வதேச தரத்திற்கு யாழிலுள்ள உணவகங்களை மாற்ற முயற்சி ?

யாழில் உள்ள உணவு தொழிற்சாலைகளை உலகத்தரம்  வாய்ந்தாக மாற்றுவதற்காக நாம் முயற்சிக்கின்றோம். எனவே எமது  அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் தமது செயற்பாடுகளை தொடங்குவார்கள் என வடமாகாண சுகாதார  உத்தியோகத்தர் கேசவன் தெரிவித்தார். இன்று முற்பகல் 10.30 மணியளவில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்  தெரிவிக்கையில்  ஜேர்மனின்...

வீட்டு வளவுக்குள்வேகக் கட்டுப்பாட்டை இழந்து புகுந்த பாரவூர்தி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஒன்று வீட்டு வளவுக்குள் புகுந்து விபத்திற்குள்ளாகியுள்ளானதில் சாரதி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். மட்டக்களப்பு, இருதயபுர சந்தியில் உள்ள பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீட்டின் சுற்று மதிலை உடைத்துக்கொண்டு குறித்த பாரவூர்தி வீட்டு வளவுக்குள் புகுந்துள்ளது இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் அருகில் இருந்த மின்கம்பம் ஒன்று சேதமடைந்துள்ளது இச் சம்பவம் தொடர்பான...

வியாழன், 2 பிப்ரவரி, 2017

அதிக வருமானம் வெளிநாட்டவர்களால் பெற்ற இலங்கை!

இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் கடந்த வருடம் அதிகளவான வெளிநாட்டு வருமானம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல  தெரிவித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு இலங்கையில் பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி 7,241.5 மில்லியன் அமெரிக்க டொலராகும். இலங்கை பெறுமதியில் அது 1,054.5 பில்லியன் ரூபாவாகும். இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 3.7 வீத  அதிகரிப்பாகும். 2015ஆம் ஆண்டு பதிவாகிய வெளிநாட்டு வருமானத்தின் பெறுமதி...