வணக்கம்

புதன், 31 ஆகஸ்ட், 2016

காலாவதி ஐஸ்கிறீம் .விற்ற வர்த்தகருக்கு அபராதம்

இரண்டு காலாவதி திகதியிடப்பட்ட ஐஸ்கிறீம்களை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 4500 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால்  நேற்று  திங்கட்கிழமை தீர்ப்பளித்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவில் இயங்கி வர்த்தக நிலையமொன்றில் இவ்வாறு இரண்டு திகதிகள் இடப்பட்டிருந்த ஐஸ்கிறீம்களை, அப்பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கண்டுபிடித்தனர். அதனை விற்பனை செய்த வர்த்தகருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்...

கடற்படை வாகனம் மோதி வயோதிபர் மரணம்

தெல்லிப்பழை தபாற்கந்தோர் அருகில் நேற்றுபிற்பகல் கடற்படை  “ட்ரக்“ மோதி வயோதிபர் மரணமடைந்துள்ளார்.  தெல்லிப்பளையைச் சேர்ந்த  60வயதுடைய ஐயம்பிள்ளை சற்குணராஜா என்பவரே மரணமடைந்தார்.  இவ் விபத்து நேற்று   மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.  விபத்தில் காயமடைந்தவர் உடனடியாக தெல்லிப்பளை ஆதார  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிக்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி...

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

நல்லுார்க் கந்தன் திருவிழாவுக்கு ஆசாரசீலர்களாக வருவதே அவசியம்!

நல்லுார்க்கந்தன் பெருந் திருவிழாவுக்கு வருகை தரும் அடியவர்கள் ஆசரசீலர்களாக வரவேண்டுமேதவிர மேலங்கி இல்லாது வரவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என யாழ்ப்பாண இந்து சமய மறுமலர்ச்சி அமைப்புத் தலைவர் தெரிவித்துள்ளார். பண்டைய காலத்தில் பிராமணர்கள் தங்களது அடையாளமான பூநுாலை உடம்பில் போட்டிருப்பர். கோவில்களில் பிராமணர்களுக்கும் ஏனைய பக்தர்களுக்கும் வித்தியாசம் தெரிவதற்காகவே மேலங்கியுடன் ஆண்கள் கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று அந்தக்காலத்தில் கோவில்களில் உத்தரவிட்டிருந்ததாக...

சனி, 27 ஆகஸ்ட், 2016

கனடா செல்ல பயணித்தவர்கள் விபத்தில் பலி

புத்தளம்-அனுராதபுரம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று மீது காட்டு யானை நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் மீஓயா பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்களில் இரண்டு பெண்கள் உள்ளடங்குவதுடன் சிகிச்சைக்காக இவர்களை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, யாழ்பாணம்,பருத்தித்துறையை சேர்ந்த 39 வயதுடைய நபரே சம்பவத்தில்...

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் தரம் 5 பரீட்சை முடிவுகள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தேசிய ரீதியில் இன்று இப்பரீட்சை நடைபெற்று முடிந்தது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு நாட்டின் சகல பாகங்களிலும் பரீட்சை நிறைவடைந்தது. இப்பரீட்சையின் சகல விடைத்தாள்களும் இன்று நள்ளிரவாக முன்னர் கொழும்பிலுள்ள பரீட்சைகள் திணைக்களத்தை வந்தடையும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்....

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

குழுவினர்வாள்வெட்டில் குடும்பஸ்தர்யாழில் பலி

இனந்தெரியாத குழுவினர் வாளால் வெட்டியதில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் - சங்குவேலியில் நேற்றுப் புதன்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சிவகுமார் பிரணவன் (வயது 35) என்பவரே உயிரிழந்தவராவார்.  நேற்றிரவு வீட்டின் முன்னால் நின்றிருந்தவரை ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட குழு வாளால் வெட்டியது. இதில் அவர் தலை, கழுத்து, கை, கால் பகுதிகளில் கடும் காயங்களுக்கு இலக்கானார்....

கம்பியால் முதியவரை தாக்கி சங்கிலி கொள்ளை

யாழ்ப்பாணம், அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், குடும்பஸ்தரை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கொள்ளையடித்து  சென்றுள்ளனர். இன்று(புதன்கிழமை) அதிகாலை 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எஸ்.வீ. சமன்குணதிலக,  தெரிவித்துள்ளார். இதன்போது கந்தசாமி மார்க்கண்டேயர் வயது(72) என்ற முதியவரே தலையில் பலத்த...

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

உடுவில் பகுதியில் தொற்று நோய் பரவல் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

யாழ். உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளான நாய்கள் கடந்த இரண்டு மாதங்களாக ‘பாவோ’ நோய்த் தொற்றின் தாக்கத்துக்கு இலக்காகி வருவதாக உடுவில் கால்நடை வைத்திய அதிகாரி எஸ்.சி. விமலகுமார்  தெரிவித்துள்ளார். பாவோ நோய் வைரஸ் மூலம் பரவும் ஒரு வித நோயாகும். குறித்த நோய்த் தொற்றுக்கு இலக்கான நாய்க்கு ஆரம்பத்தில் உணவில் நாட்டமிருக்காது. பின்னர் கடுமையான வாந்தி, வயிற்றோட்டம், இரத்தத்துடன் வயிற்றோட்டம் அல்லது...

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

விமானம்கடைசி நிமிடத்தில் வெடித்த! பயணியின் திகில் அனுபவம்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று துபாயில் அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தின் பின்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பயணிகள் பயத்தில்  அலறி துடித்தனர். கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ’போயிங்’ ரக விமானம் இன்று 282 பயணிகள் மற்றும் 18 விமான குழு என 300 பேருடன் துபாய்க்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் துபாய் விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை...

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

மாணவனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

ஊர்காவற்றுறை நாரந்தணை பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் சடலமொன்று, இன்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவன் நேற்று திங்கட்கிழமை முதல் காணாமற்போயிருந்த நிலையிலேயே, இன்று வெற்றுக் காணியிலுள்ள மரமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவனின் இறப்பு தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை நீதிவான் ஏ.எம்.எம்.றியால், விசாரணைகளை...

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

வெளிநாட்டுச்சுற்றுலாப் பயணி ஆரியகுளம் பகுதியில் படுகாயம்

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் படுகாயமடைந்த நிலையில் (29) யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை  அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் வெளிநாட்டு பிரஜைகளான சுற்றுலா பயணிகள் இருவர் நடந்து சென்றுக்கொண்டிருந்துள்ளனர். அதன்போது, அவர்களுக்கு மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள்  வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் சுற்றுலா பயணியான பெண்ணின்...