வணக்கம்

வியாழன், 25 மே, 2017

விபத்தில் 7 பிள்ளைகளின் தாயார் பரிதாபச் சாவு!!!

யாழ்ப்பாணத்தில் நடந்த இறப்பு வீட்டுக்குச் செல்வதற்கு பேருந்துக்காகக் காத்திருந்த 7 பிள்ளைகளின் தாய்க்கு அவரது மகனின் புத்தம் புதிய மோட்டார் சைக்கிளே எமனாக மாறிய சம்பவம் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு அண்மையில் நேற்று இடம்பெற்றது என்று பொலிஸார்  தெரி­வித்­­த­னர். புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன் ரம்பை (வயது 51) என்ற 7 பிள்ளைகளின் தாயாரே விபத்தில் உயிரிழந்தவராவர். “யாழ்ப்பாணத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டுக்குச்...

கொடூரமானமுறையில் ஈரானில் ஈழத்து இளைஞர் படுகொலை!

தொழில் நிமித்தம் ஈரான் சென்ற ஈழத்து இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞரின் சடலம் நீர்கொழும்பு, மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. முல்லைத்தீவு, அலம்பிள் பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் தந்தையிடம்...

மூதாட்டியை அச்சுறுத்தி உடுவிலில்15 பவுண் நகை கொள்ளை!

உடுவிலில் நேற்று அதிகாலை வீடு புகுந்த கொள்ளையர்கள் 15 பவுண் தங்க நகைகள், பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் தனித்திருந்த மூதாட்டியை அச்சுறுத்தி ஓரிடத்தில் இருத்திவிட்டுச் சில மணித்தியாலங்களாகக் கொள்ளையர் தேடுதல் நடத்தி 15 பவுண் நகைகள், 10 ஆயிரம் ரூபா பணம், உண்டியலில் காணப்பட்ட ஒரு தொகைப் பணம் என்பனவற்றைக் கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர். உடுவில், டச்சு வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று அதிகாலை...

புதன், 24 மே, 2017

பஸ் கட்டணங்கள் ஜூலை மாதம் முதல் உயர்த்தப்படும்?

எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பின் அடிப்படையில் இவ்வாறு ஜூலை மாதம் கட்டண அதிகரிப்பு பற்றி அறிவிக்கப்பட  உள்ளது. ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 9 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக உயர்த்தப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கோரியுள்ளார். இம்முறை சிறியளவில் பஸ் கட்டணங்கள் உயர்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பஸ் கட்டண உயர்வு குறித்து...

செவ்வாய், 16 மே, 2017

யாழில் கடன் தொல்லையால் தந்தை தற்கொலை!

குடும்­பத் தலை­வர் ஒரு­வர் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. கடன்­பட்டு வெளி­நாடு சென்ற தனது மகன் திருப்பி அனுப்­பப்­பட்­ட­தால் கட­னைத் திருப்­பிச் செலுத்த முடி­யாத நிலை­யில் குறித்த தந்­தை­யார் தவ­றான முடிவு எடுத்து உயிரை மாய்த்­துள்­ளார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வத்­தில் சண்­டி­லிப்­பாய் மாசி­யப்­பிட்­டி­யைச் சேர்ந்த முரு­கேசு தம்­பி­ராசா (வய­துய- 58) என்­ப­வரே...